Tuesday, October 15, 2024

திருநெல்வேலியில் ராஜராஜன் கல்வெட்டு-திருவாலீஸ்வரம்.


திருவாலீஸ்வரம்
இவ்வூர் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மன்னார் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் கடனாநதிக் கரையில் நெல்வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள சிவன் கோயில் இவ்வூரின் வரலாற்றினை அறிந்துகொள்வதற்கு உதவுகின்றது.
கடனாநதியின் பெயர் கடம் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்துள்ளது. கடம் என்றால் பானை அல்லது கலசம் என்று பொருள். இந்நதிநீர் அகஸ்தியர் கையிலிருந்த கலசநீர் என்றும் அகஸ்தியர் இக்கோயிலுக்கு மேற்கேயுள்ள மலையடிவாரத்தில் தங்கியிருந்தார் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயில் சோழர் காலக் கட்டடக் கலைப்பாணிக்கு கல்வெட்டுகள் இவ்வூரைத் திருவாலீஸ்வரம் என்றும் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.
எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலில் சோழர், சோழ பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 9-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரை முள்ளிநாட்டு ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் மன்னார்கோயில் ஆகிய இம்மூன்று ஊர்களும் ஒரே பகுதியாக ராஜராஜச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியுள்ளது. முதலாம் இராசராசன் காலத்திலும் அவனுக்குப் பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது. இவர்கள் காலத்தில் அவனுக்குப பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது.
இவர்கள் காலத்தில் நாகர்கோவிலில் கோட்டாற்றுக்கு அருகில் நிறுத்தியதைப் போன்று பெரும் படையொன்று இப்பகுதயிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு மூன்று கை மகாசேனை என்று பெயர். சடாவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் கல்வெட்டு இக்கோயில் இறைவனைத் திருவாலீஸ்வரம் உடைய மகாதேவர் எனக் குறிப்பிடுகின்றது. ஊரினை முள்ளிநாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு ராஜராஜப் பாண்டிநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் குலசேகர பாண்டியன் (பூவின்கிழத்தி) சீவல்லபன் ஆகியோரின் கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டியர் கல்வெட்டுகள் இவ்வூரை திருவாலீஸ்வரம்ம் என்றும் ராஜ ராஜ சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடுகின்றன.
இங்குள்ள சௌந்தர்யநாயகி அம்மன் கோயிலில் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிற் கல்வெட்டுகளிலிருந்து திருவாலீஸ்வரம் என்பது ஊரினையும், கோயிலினையும் குறிப்பிடுவதை அறியலாம். இக்கோயில் விமானத்தில் கர்ணகூடுசாலைப் பகுதிகளில் காணப்படும் சிற்பங்கள் சிறந்த கலை நயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.
நன்றி-குற்றாலம் அகழ்வைப்பகக் கையேடு.



Monday, October 7, 2019

மருது பாண்டிய மன்னர்கள்

ஆசிரியர் மீ.மனோகரன்
மருது பாண்டியர் பற்றிய
மிக துல்லியமான ஆவணத் தொகுப்பு
இந்நூலை
இணையத்தில் வாங்க
https://www.vaaa.in/shop/maruthu-pandiya-mannargal/
WHATS APP எண்ணில் தகவல் செய்யுங்கள்
9944400590

கிழவன் சேதுபதி

கிழவன் சேதுபதி
இந்நூலை எழுதியவர்
மருதுபாண்டிய மன்னர்கள்தென் அமெரிக்காவின் சோழன்
போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதிய
ஆய்வாளர் மீ.மனோகரன் அவ்ரகள்

வீர மறவர் மன்னர் கிழவர் ரகுநாத சேதுபதி(கி.பி. 1671 முதல்1710 வரை) வரலாறு.
கிழவன் என்பதற்கு உரிமைகொண்டவன் என்பது பொருளாகும்.
மறவர் சீமை எனப்படும் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதிகள்
என்று அழைக்கப்பட்டனர். சேதுக்கரையை பாதுக்காக்க இவர்கள் அமர்த்தப்பட்டதால் சேதுபதிகள்
ஆவர். இவர்களில் மிகவும் புகழ்ப்பெற்றவர் கிழவர் சேதுபதி எனப்படும் ரகுநாத சேதுபதியாவார்.
இம்மன்னனுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் போகலூரை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆனால் கிழவர் சேதுபதிதான் தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றியதோடு அங்கே கோட்டை கொத்தளங்களையும் எழுப்பினார். திருமயம் கோட்டை இம்மனரால் கட்டப்பட்டதே ஆகும்.
இந்நூலை வாங்க
https://www.vaaa.in/shop/kilavan-sethupathi/
அல்லது
WHATS APP NO 9944400590

Sunday, October 6, 2019

தென் அமெரிக்காவின் சோழர்

ஆசிரியர் மீ .மனோகரன்
(மருதிருவர் வரலாற்று நூலை எழுதியவர் )
1976 ல்
எழுதப்பட்ட நூல்
தென் அமெரிக்காவிலாவது
சோழர்களாவது
என ஐயப்படுபவர்கள்
இராஜேந்திர சோழன்
கடாரம் மட்டுமின்றி
கீழைக்கடல் முழுவதும் பல தீவுகளை வென்று
வரலாற்று சின்னங்களை
விட்டு வந்திருப்பதை பார்த்தால்
மேலும்
கிழக்கே பயணம் செய்தால்
தென் அமெரிக்கா வந்து விடும் என்பதை அறிவார்கள்
வரலாற்று ஆசிரியர்
மொழிக்கூறுகளையும்
பண்பாட்டு கூறுகளையும் சுட்டி காட்டி
தென் அமெரிக்காவில் சோழர் காலூன்றி இருக்கக்கூடும்
என்ற எண்ணத்தை நம்மக்கு ஏற்ப்படுத்தி வருகிறார்



Sunday, January 31, 2016

மதுரை கீழடி

மதுரைக்குஅருகேகீழடியில் 

2,200 ஆண்டுகளுக்குமுந்தையஒருபழங்கால

கரத்தின் பகுதிகள்  அகழ்வாராய்ச்சியில்

 கிடைத்துள்ளனமதுரையில் இருந்து 


12 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கும் கீழடியி


ல் ஒருதென்னந்தோப்பின் உள்ளே இருந்து

ஓர் ஊரையேகண்டுபிடித்திருக்கிறார்கள்


பிற்காலப் பாண்டியர்  காலத்தில் 


குந்திதேவிசதுர்தேவிமங்கலம்என்றுஅழைக்க

ப்பட்டஊர் இது
.
சங்ககாலத்துக்கும் கட்டடத்துக்கும் தொடர்பே


கிடையாதுஎன்று இதுவரைசொல்லிவந்தார்கள்

இதோசான்றுகிடைத்துவிட்டது

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டஊரில் உள்ளகட்ட


டங்கள் செங்கல்லால்  கட்டப்பட்டுஉள்ளன.

 மண்பாண்டஓடுகளில் 


தமிழ்  பிராமிஎழுத்துஉள்ளது

ஒருமகத்தானசெய்திகிடைத்துள்ளது

Saturday, November 21, 2015

பதினெண்கீழ்க்கணக்கு

பதினெண்கீழ்க்கணக்கு

      THANKS TO http://www.vaaa.in/products/product-31
இந்நூல்கள் மூன்று தொகுதிகளாக வெளியிமடப் பெற்றுள்ளது. முதல்  தொகுதியுள் நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, திணைமாலை ஐம்பது ஆகிய நூல்கள் இனிய, எளிய உரையுடன் எல்லோரும் பயன் அடையும் வகையிலும் குறிப்பாக மாணவர்களுக்குப் மிக்க பயன்தரும் நூலாகும்.         
நூற்குறிப்பு
 நூற்பெயர்                    :      பதினெண்கீழ்க்கணக்கு - 1                                                                     
ஆசிரியர்                      :      பழைய உரையாசிரியர்கள்
 பக்கம்                                 :        40+384=424
 நூல் கட்டமைப்பு            :        சாதாரணம்
விலை                        :        400/-
 பதிப்பகம்                     :        தமிழ்மண்
          இந்நூல்கள் மூன்று தொகுதிகளாக வெளியிமடப் பெற்றுள்ளது. முதல்  தொகுதியுள் நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, திணைமாலை ஐம்பது ஆகிய நூல்கள் இனிய, எளிய உரையுடன் எல்லோரும் பயன் அடையும் வகையிலும் குறிப்பாக மாணவர்களுக்குப் மிக்க பயன்தரும் நூலாகும்.


பொருளடக்கம்
  1. பதிப்புரை
  2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
  3. பதினெண்கீழ்க்கணக்கு
  4. நூலாசிரியர்கள்

நூல்

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை,
  3. கார் நாற்பது,
  4. களவழி நாற்பது,
  5. இன்னா நாற்பது,
  6. இனியவை நாற்பது,
  7. ஐந்திணை ஐம்பது,
  8. ஐந்திணை எழுபது,
  9. திணை மாலை நூற்றைம்பது,
  10. திணைமாலை ஐம்பது

பதினெண்கீழ்க்கணக்கு 2

        
நூற்குறிப்பு
 நூற்பெயர்                    :      பதினெண்கீழ்க்கணக்கு - 2                                                                          
 ஆசிரியர்                      :      பழைய உரையாசிரியர்கள்
 பக்கம்                                 :        24+408=432
 நூல் கட்டமைப்பு            :        சாதாரணம்
 விலை                        :        405/-
 பதிப்பகம்                     :        தமிழ்மண்
   
        இந்நூல் பதினெண்கீழ்கணக்கு நூல் வரிசையில் இரண்டாவது தொகுதியாகும். இதனில் திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, ஆகிய எளிய இனிய உரையுடன் எல்லோருக்கும் பயன்படும் வகையிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நற்பயனைக் கொடுக்கும்.

பொருளடக்கம்
  1. பதிப்புரை
  2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
  3. நூலாசிரியர்கள்
 நூல்

  1. திருக்குறள்
  2. திரிகடுகம்
  3. ஆசாரக்கோவை


பதினெண்கீழ்க்கணக்கு 3                         

 நூற்குறிப்பு 
நூற்பெயர்                    :      பதினெண்கீழ்க்கணக்கு - 3                                                                     
ஆசிரியர்                      :      பழைய உரையாசிரியர்கள்
 பக்கம்                                 :        24+328=352
 நூல் கட்டமைப்பு            :        சாதாரணம்
 விலை                        :        330/-
பதிப்பகம்                     :        தமிழ்மண்
  
        இந்நூல் பதினெண் கீழ்கணக்கு நூல் வரிசையில் மூன்றாவது தொகுதியாகும். பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்கள் எளிய இனிய உரையுடன் எல்லோருக்கும் பயன்படும் வகையிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நற்பயனைக் கொடுக்கும்.

பொருளடக்கம்
  1. பதிப்புரை
  2. மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
  3. நூலாசிரியர்கள்

நூல்

  1. பழமொழி நானூறு,
  2. சிறுபஞ்சமூலம்,
  3. இன்னிலை
  4. முதுமொழிக்காஞ்சி,
  5. ஏலாதி


Friday, November 13, 2015

தமிழ் இலக்கணப் பேரகராதி -தி. வே. கோபாலையர் ILAKKANA AGARATHI

மொழியாய்வாளர்களுக்கும், இலக்கண அறிஞர்களுக்கும் மிகவும் பயன்தரும் நூல். சொல்லுக்கு விளக்கமும், மேற்கோளும் காட்டும் தொகுப்புகள். முதன்முதலில் எழுத்து – சொல்- பொருள்- யாப்பு – அணி – மெய்ப் பாட்டியல் எனும் வரிசையில் வரும் தமிழின் இலக்கணச் சுரங்கம்

பண்டித வித்துவான் தி. வே.
கோபாலையர்


தமிழ் இலக்கணப் பேரகராதி

தமிழ் இலக்கணப் பேரகராதி – எழுத்து 1, 2
தமிழ் இலக்கணப் பேரகராதி – சொல் 1, 2, 3, 4
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - அகம் 1, 2, 3
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - அணி 1, 2
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - புறம்
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - யாப்பு 1, 2
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - பாட்டியல்
தமிழ் இலக்கணப் பேரகராதி – பொருள் - மெய்ப்பாடு
தலைசொல் அடைவ

18 தொகுதிகள்
மொத்த விலை: ரூ. 5030/-